உடுமலையில் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்

உடுமலையில் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கம் (INTUC) சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிலைகளுக்கு மாலை அணிவிப்பு, ஊர்வலம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நேரு வீதியில் உள்ள காமராஜர் பவனில் தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (INTUC) சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவிற்கு INTUC தலைவர் கோவை செல்வன் தலைமை வகித்தார். உடுமலை நகர காங்கிரஸ் தலைவர் கோ.ரவி வரவேற்புரை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் தென்னரசு உள்ளிட்டோர் மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் ஆகியோரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.



இதையடுத்து உடுமலை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கும், பழைய பஸ் நிறுத்தத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும், ராஜேந்திரா சாலையில் உள்ள நேரு சிலைக்கும் நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் INTUC பொருளாளர் உத்தமராஜ், திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், லோகநாதன், கிட்டுசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஜனார்த்தனன் உள்ளிட்ட INTUC தொழிற்சங்க நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...