சாலை பாதுகாப்பு விழிப்புணர்வில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்த தன்னார்வலர்கள்



கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்களிடையே கோவை மாநகர காவல்துறையினர்  பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இவர்களுடன் இணைந்து பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், கல்லூரி மாணவர்களும் சாலையில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக, இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை கோவை பிரதான சாலையான லட்சுமி மில்ஸ் சிக்கனலில் போக்குவரத்து காவல்துறையினர் உதவியுடன் எஸ்.என்.ஆர் கல்லூரி மாணவர்கள், சாலை நண்பர்கள், 'எஜூதர்மா' அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் 'ஷாப்த்ரூ' செயலியின் நிறுவனர்களும் கலந்து கொண்டு  வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர். 



மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்தும், காரில் செல்பவர்களுக்கு சீட் பெல்ட் அணிவது குறித்தும் மற்றும் மது அருந்திவிட்டு பயணம் செய்வதை தவிர்ப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு சாலையில் நின்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.





Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...