கோவை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் அக்டோபர் 5ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம்.


கோவை: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் அக்டோபர் 5ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பொள்ளாச்சி மெயின் ரோடு ஈச்சனாரியில் உள்ள கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இதில் DDUGKY, RSETI, TNSDC ஆகிய திட்டங்களின் கீழ் பல்வேறு இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், ஜவுளி, உள்கட்டமைப்பு, விற்பனை, CNC இயக்குநர், மின்சாரம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 8ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை படித்தவர்கள், தொழில்நுட்பக் கல்வி, பட்டயப்படிப்பு, ITI பயின்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பங்கேற்பாளர்கள் கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, சுயவிவரக் குறிப்பு, புகைப்படம் மற்றும் பிற தகுதிச் சான்றுகளின் அசல் மற்றும் நகல்களுடன் வர வேண்டும்.

இந்த முகாமில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு மற்றும் நேரடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...