கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றினர். இது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.



கோவை: கோவை ஒலம்பஸ் 80 அடி ரோட்டில் 70 கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று அகற்றினர். இந்த நடவடிக்கை, நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

கோவை, ராமநாதபுரம் சந்திப்பில் இருந்து நஞ்சுண்டாபுரம் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இருபுறமும் உள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமித்திருப்பதால், ரோட்டின் அகலம் சுருங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் நெடுநேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழித்தடமாக, அருகாமையில் உள்ள ஒலம்பஸ் 80 அடி ரோட்டை உருவாக்க மாநகராட்சி முடிவெடுத்தது.

மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த் பிரபாகர் தலைமையில் நகரமைப்பு பிரிவினர், 80 அடி ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ரோட்டின் ஒரு புறம், 70 கடைகளுக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பல கடைகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த ஷெட்கள், மழைநீர் வடிகால் மீது கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி கடைகள் மற்றும் அடுப்புகள் ஆகியவை அகற்றப்பட்டன.

மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கூறுகையில், "80 அடி ரோட்டில் இருந்து 100 ரோட்டுக்குச் செல்ல இணைப்பு சாலை ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. இச்சாலை உருவானால் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. நஞ்சுண்டாபுரம் ரோட்டில் இருந்து 100 ரோட்டில் வந்து, 80 அடி ரோடு வழியாக திருச்சி ரோட்டை அடையலாம். இதனால் நஞ்சுண்டாபுரம் சிக்னலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படாது" என்று தெரிவித்தனர்.

இந்த நடவடிக்கை மூலம் நகரின் போக்குவரத்து நெரிசல் குறைந்து, வாகன ஓட்டிகளுக்கு பயணம் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...