உப்பாறு அணைக்கு தண்ணீர் கோரி விவசாயிகள் இரண்டாவது நாள் தொடர் காத்திருப்பு போராட்டம்

பொள்ளாச்சியில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீர்வளத்துறை அதிகாரிகளின் மெத்தனப்போக்கை விவசாயிகள் கண்டித்துள்ளனர்.



Coimbatore: பொள்ளாச்சியில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் இரண்டாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட உப்பாறு பகுதியில் உள்ள அணைக்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கடந்த சில நாட்களாக உப்பாறு பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை பெய்து பரம்பிக்குளம் ஆழியார் பாசனத்திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பி வந்த நிலையில், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி உப்பாறு பகுதி விவசாயிகள் நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் நீர்வளத் துறை அதிகாரியிடம் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பதிலும் அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். அரசாணை, நீதிமன்ற வழக்கு தீர்ப்பு போன்ற ஆவணங்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்தாலும், நீர்வளத்துறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் மெத்தனப்போக்கில் செயல்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடும் வரையில் காத்திருப்பு போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும், நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சிவகுமார் கூறுகையில், "நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்றார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...