கோவையில் சிறுகுறு தொழில் நிறுவனங்களை காப்பாற்ற மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் - எஸ்பி வேலுமணி வலியுறுத்தல்

கோவையில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்து வரி உயர்வு எதிர்ப்பு மனித சங்கிலி போராட்டம் குறித்து எஸ்பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மின்கட்டண உயர்வு ரத்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



Coimbatore: கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்பி வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமியின் ஆணையின்படி கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் சிறப்பாக நடைபெற்றதாகக் கூறினார். அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் பணி 70% முடிந்துவிட்டதாகவும், விரைவில் முழுமையாக முடிவடையும் எனவும் தெரிவித்தார்.

திமுக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வரியை உயர்த்தியதையும், வரி செலுத்த தாமதமானால் வட்டி வசூலிக்கப்படும் என்ற நிலையை உருவாக்கியதையும் அவர் கண்டித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வரும் அக்டோபர் 8 அன்று மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவித்தார்.

அக்டோபர் 17 அன்று அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழாவை கோவையில் உள்ள மூன்று மாவட்டங்கள் சார்பாகவும் சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளதாக வேலுமணி தெரிவித்தார். மேலும், திமுக அரசு கோவைக்கு எந்தத் திட்டமும் தரவில்லை என்றும், மக்கள் கடுமையாக அவதியுற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

"கோவையில் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் அழிந்து போகும் சூழலில் இருக்கிறது. அவற்றைக் காப்பாற்ற மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்," என வேலுமணி வலியுறுத்தினார். சொத்துவரி, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அக்டோபர் 8 அன்று நடைபெறவிருக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் எனவும் அழைப்பு விடுத்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...