கோவை-சத்தி சாலையில் மீண்டும் மரண பயணம்: அசுர வேகத்தில் பயணிக்கும் தனியார் பேருந்துகள்


கோவை-பொள்ளாச்சி சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வழியே செல்லும் பேருந்துகள் தாறுமாறாக அதிக வேகத்தில் செல்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பான காணொலி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வாகன ஓட்டிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

அதிவேகமாக பேருந்துகளை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதை தொடர்ந்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் சம்பந்தப்பட்ட பேருந்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.  தொடர்ந்து, தனியார் பேருந்து உரிமையாளர்களிடையே அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அதி வேகத்தில் பேருந்தை இயக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.



இந்நிலையில், தற்போது கோவை-சத்தி சாலையில் இயக்கப்படும் பேருந்துகளும் அசுர வேகத்தில் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

குறுகலான நெடுஞ்சாலையான கோவை-சத்தி சாலையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் போட்டி போட்டுக்கொண்டு பேருந்துகளை இயக்கி வருகினறனர். இது தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எதிரே வரும் வாகனங்களை பொருட்படுத்தாமல் பேருந்தின் ஓட்டுனர் ஒற்றை பாதையில் அதிவேகமாக பேருந்தை இயக்கும் காட்சி பதிவாகியுள்ளது. 

இது மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதிகாரிகள் இப்பிரச்சனையில் தலையிட்டு அதிவேகமாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் நடவடிக்கை எடுப்பதோடு, அந்த பேருந்தை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...