திருப்பூர் வெடி விபத்து: பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி; பொதுமக்களும் கைகொடுப்பு

திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்த வெடி விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தங்குமிடம், உணவு வழங்கி உதவி. பொதுமக்களும் தன்னார்வமாக உதவி கரம் நீட்டினர்.


Coimbatore: திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நடந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடி உதவிகளை வழங்கி வருகிறது. பொதுமக்களும் தன்னார்வமாக முன்வந்து உதவி செய்து வருகின்றனர்.

திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் கார்த்தி என்பவரின் வீட்டில் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில், அப்பகுதியில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. இதனால் அங்கு வசித்த குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்க முடியாத நிலை ஏற்பட்டது.



இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பிரித்துராஜ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். அதன்படி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் 30க்கும் மேற்பட்டவர்களை பாண்டியன் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவு, உடை மற்றும் போர்வை உள்ளிட்டவற்றை வழங்கி பாதுகாப்பை உறுதி செய்தனர்.

சிலர் தங்கள் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றனர். பிற மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனியார் திருமண மண்டபத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களுக்கு மாற்று தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணம் வழங்க பரிந்துரைக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...