பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணி தொடக்கம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கியது. சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண் குமார் முன்னிலையில் பூமி பூஜை நடைபெற்றது.


Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கியது. 15வது நிதிக்குழு நிதியிலிருந்து ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

பாலமலை மெயின்ரோடு ரேசன் கடை முதல் குமார் வீடு வரை மழைநீர் வடிகால் அமைக்கப்படும். இப்பணிக்கான பூமி பூஜை இன்று (அக்டோபர் 9) நடைபெற்றது. கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண் குமார் முன்னிலையில் பூமி பூஜை நடத்தப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் துரைசாமி, யூனியன் கவுன்சிலர் நர்மதா துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், அதிமுக கழக செயல் வீரர்கள் மற்றும் பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இப்பணி முடிவடைந்தவுடன், அப்பகுதியில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...