கோவையில் அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி: தினமலர் அணி சாம்பியன்

கோவையில் அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் தினமலர் அணி, கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.


கோவை: கோவை மாநகர போலீஸ் மற்றும் 'ஸ்பார்க்கிளிங் ஈவென்ட்ஸ்' இணைந்து நடத்திய அனைத்து துறையினருக்கான டி-20 கிரிக்கெட் போட்டி கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் தினமலர், தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ், மாநகர போலீஸ், மாவட்ட போலீஸ், விமானப்படை, மாநகராட்சி, கலெக்டர் அலுவலகம், வருமான வரித்துறை, 110 பட்டாலியன், வணிக வரித்துறை, மீடியா 11, கோவை பிரஸ் கிளப் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்றன.

அக்டோபர் 9 அன்று கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தினமலர் அணி, கோவை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற தினமலர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அணியின் துவக்க வீரர் விஜய் சிறப்பாக விளையாடி 60 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்தார். 20 ஓவர்களில் தினமலர் அணி 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

பதிலுக்கு ஆடிய துணை கமிஷனர் அணி 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் டி.எல்.எஸ். முறைப்படி தினமலர் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தினமலர் அணியின் விஜய் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

கோவை மாவட்ட போலீஸ் அணி மூன்றாம் இடத்தையும், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகளை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் துணை கமிஷனர் ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...