தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு கோவையில் இருந்து எட்டு மாணவர்கள் தேர்வு

கொல்கத்தாவில் நடைபெறவுள்ள தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு கோவையில் இருந்து எட்டு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மையத்தில் பயிற்சி பெற்றவர்கள்.


Coimbatore: கொல்கத்தாவில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மையத்தில் பயிற்சி பெற்ற எட்டு மாணவ, மாணவியர் தேர்வாகியுள்ளனர்.

இந்த தேசிய போட்டிக்கான தகுதி தேர்வு ஈரோடு கரட்டுப்பாளையம் அரசுப் பள்ளியில் அக்டோபர் 9 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் இருந்து 120 பேர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோவை மையத்தில் பயிற்சி பெற்ற 15 பேர் பங்கேற்றனர்.

தேர்வாகியுள்ள எட்டு மாணவர்களின் விவரம் பின்வருமாறு:

1. கோவை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த ரியாஸ்ரீ

2. கோவை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த ரேச்சல்

3. கோவை மாநகராட்சி பள்ளியைச் சேர்ந்த சரண் பிரியா

4. ஸ்டேன்ஸ் பள்ளியின் பாகித் அகமத்

5. ஸ்டேன்ஸ் பள்ளியின் ஜாய் ஆன்ட்ரியா

6. அவிலா கான்வென்டைச் சேர்ந்த அக்ஷரா

7. சபர்பன் பள்ளியின் மோனிகா

8. சபர்பன் பள்ளியின் மவுனேஷ்

இந்த மாணவர்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளர் சையத் இப்ராஹிம் ஆவார். தேர்வான மாணவர்களையும் பயிற்சியாளரையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் அருணா மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆனந்தன் ஆகியோர் பாராட்டினர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...