கோவையில் பல்வேறு பகுதிகளில் கனமழை: போக்குவரத்து நெரிசல்

கோவை ரேஸ்கோர்ஸ் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.


கோவை: கோவையில் இன்று (அக்டோபர் 11) பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக நான்கு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் நெடுந்தூரம் வரிசையில் நிற்கின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறையினர் வந்தால் மட்டுமே போக்குவரத்தை சரி செய்ய முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.



சிங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலாக கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில், தற்போது திடீரென கனமழை பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

திடீர் மழையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். பலர் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு மழைக்காக ஒதுங்கி நிற்கின்றனர்.

மழை தொடர்ந்து பெய்து வருவதால், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த காவல்துறையினரின் உதவி தேவைப்படுவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...