கழிவு பஞ்சு ஆலைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாக கூறி நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் சூலூர் செம்மாண்டம்பாளையம் பஞ்சாயதிற்கு உட்பட்ட குறுக்குபாலையம் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதியில் அமைந்துள்ள கழிவு பஞ்சு ஆலைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாக தெரிவித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் செய்து வருவதாகவும் அப்பகுதியில் அமைந்துள்ள கழிவு பஞ்சு மற்றும் பனியன் வேஸ்ட் மூலம் மாவு போல் அரைக்கபட்டு பஞ்சாக்கும் ஆலைகளால் கரும்புகை ஏற்பட்டு அதன் துகள்களால் விவசாய நிலங்கள் மாசுபடுவதாக குற்றம் சாட்டியவர்கள் இந்த ஆலைகள் கட்டிட அனுமதி மாசு கட்டுபாட்டு அனுமதியின்றி இயங்கி வருவதாக குற்றம் சாட்டினர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அனுமதியின்றி செயல்படும் இந்த ஆலைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...