கழிவு பஞ்சு ஆலைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாக கூறி நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் சூலூர் செம்மாண்டம்பாளையம் பஞ்சாயதிற்கு உட்பட்ட குறுக்குபாலையம் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதியில் அமைந்துள்ள கழிவு பஞ்சு ஆலைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கபடுவதாக தெரிவித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் செய்து வருவதாகவும் அப்பகுதியில் அமைந்துள்ள கழிவு பஞ்சு மற்றும் பனியன் வேஸ்ட் மூலம் மாவு போல் அரைக்கபட்டு பஞ்சாக்கும் ஆலைகளால் கரும்புகை ஏற்பட்டு அதன் துகள்களால் விவசாய நிலங்கள் மாசுபடுவதாக குற்றம் சாட்டியவர்கள் இந்த ஆலைகள் கட்டிட அனுமதி மாசு கட்டுபாட்டு அனுமதியின்றி இயங்கி வருவதாக குற்றம் சாட்டினர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அனுமதியின்றி செயல்படும் இந்த ஆலைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...