கோவை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தை கடத்த முயற்சி: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் கடத்தல் மிரட்டல் துண்டு சீட்டு கண்டெடுக்கப்பட்டது. விரிவான சோதனைக்குப் பின் வதந்தி என உறுதி செய்யப்பட்டு, விமானம் தாமதமாக புறப்பட்டது.


Coimbatore: கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் கடத்தல் மிரட்டல் துண்டு சீட்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அக்டோபர் 13 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் 169 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, விமானத்துக்குள் கிடந்த ஒரு துண்டு சீட்டில் விமானத்தை கடத்தப் போவதாக எழுதப்பட்டிருந்தது.

உடனடியாக இண்டிகோ ஊழியர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் அளித்தனர். பாதுகாப்பு நடவடிக்கைக்காக விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஆகியோரும் அடங்குவர்.

பின்னர் அனைத்து பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. விமானமும் முழுவதுமாக தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விரிவான சோதனைக்குப் பின்னர், மிரட்டல் துண்டுச் சீட்டு வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ஒன்றரை மணி நேரம் தாமதமாக மாலை 5.30 மணியளவில் விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...