இஸ்லாமியர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டியது எங்கள் கடமை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கோவை கோட்டைமேடு பகுதியில் மன்பஉல் உலூம் மெட்ரிகுலேஷன் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உரையாற்றினார். இஸ்லாமியர்களின் பங்களிப்பை பாராட்டினார்.


Coimbatore: கோவை கோட்டைமேடு பகுதியில் இயங்கி வரும் மன்பஉல் உலூம் மெட்ரிகுலேஷன் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் துவக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் தலைவர் இனாயத்துல்லாஹ் தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். மேலும், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் Kranthi Kumar Pati, கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது உரையில், தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இந்தப் பள்ளியை தரம் உயர்த்தி இருப்பதாகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கல்வியை தரத்தோடு வழங்க வேண்டும் என்று எண்ணக்கூடியவர் என்றும் கூறினார். அதன்படி இந்தப் பள்ளி நிர்வாகம் தரமான கல்வியை தொடர்ந்து வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.



அமைச்சர் மேலும் பேசுகையில், "நாடு விடுதலை பெற்றதற்கு முக்கிய காரணமாக விளங்கிக் கொண்டிருப்பவர்கள் இஸ்லாமியர்கள். அவர்களுக்கு என்றும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டியது எங்களது கடமை" என்று குறிப்பிட்டார். மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், பெற்றவர்களுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்கள் கற்பிப்பதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றும் கூறினார்.



ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத், சிறப்பான கல்வி நிறுவனத்தை உருவாக்கி இருப்பதாக பாராட்டிய அமைச்சர், ஜமாத்தின் கீழ் கல்லூரி வரவேண்டும் என்றும், அதற்காக ஒரு தோழனாக இருந்து முழு முயற்சியோடு செயல்படுவேன் என்று உறுதி அளித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...