குறிச்சி பகுதியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வுகாணாத மாநகராட்சியினைக் கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் குடிநீர் பிரச்சனை உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அனைத்து கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுந்தராபுரம் சங்கம் வீதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக குறிச்சி பகுதி செயலாளர் குறிச்சி பிரபாகரன் தலைமை தாங்கினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது காலி குடங்களுடன் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, முழக்கங்களை எழுப்பினர். கோவை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் வாரம் ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதாகவும், ஆனால் குறிச்சி பகுதியில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். 

மேலும், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதால் மக்கள் அவதிக்குள்ளாவதாகவும், மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் மக்களை ஒருமுறை கூட பார்க்க வரவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பெண்கள் உட்பட 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...