வாகன ஓட்டியை காவலர் தாக்கியதாக கூறி பொதுமக்கள் வாக்குவாதம்

கோவையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்ற இளைஞரை காவலர் தாக்கியதாகக் கூறி, போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை, கூட்ஸ்செட் சாலையில் டிராபிக் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மரக்கடை பகுதியை சேர்ந்த ஆசிக் என்ற இளைஞர் அவ்வழியாக வந்துள்ளார்.

ஆசிக் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கான எல்.எல்.ஆர் மட்டுமே வைத்திருந்ததால், காவலருக்கு பயந்து வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் ஒருவர் ஆசிக் சென்ற இருசக்கர வாகனத்தை இழுத்து கீழே தள்ளியதாகவும், ஹெல்மெட்டால் ஆசிக்கை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து, தகவலறிந்து அங்கு வந்த வெரைட்டி ஹால் காவல் துறையினர் பொதுமக்களை சமரசப்படுத்தி கலைந்து செல்ல செய்தனர். இந்த வாக்குவாதம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...