மேட்டுப்பாளையம் நகராட்சியில் மழைக்கால மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் பணியாளர்கள்

வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் நகராட்சியில் அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, மீட்பு உபகரணங்களுடன் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். நகராட்சி தலைவர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.


Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழைக்கால மீட்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஏற்கனவே அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மழைக்கால அவசர நிலைகளை எதிர்கொள்ள தேவையான மீட்பு உபகரணங்களுடன் பணியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி இன்று (அக்டோபர் 15) நேரில் பார்வையிட்டார். இதன்போது, மழைநீர் தேங்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய அவசர நிலைகளை எதிர்கொள்ள 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நகராட்சி தலைவர் உத்தரவிட்டார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...