கோவையில் பட்டாசு கடைகளில் லஞ்சம் வாங்குவோர் மீது புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

கோவை மாநகர காவல்துறை, பட்டாசு கடைகளில் அதிகாரத்தை பயன்படுத்தி லஞ்சம் வாங்குவோர் மீது புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளது. புகார்களின் ரகசியம் காக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகர காவல்துறை, தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகளில் லஞ்சம் வாங்குவோர் மீது புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளது.

கோவை மாநகர காவல்துறை தனது அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் இன்று (அக்டோபர் 15) வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவையில் உள்ள பட்டாசு கடைகளில் அரசு ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினர், அரசியல் கட்சியினர் மற்றும் சாதி/மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் யாரேனும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் அல்லது பரிசுப் பொருட்கள் பெற முயற்சித்தால், அது குறித்து புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.



இது தொடர்பான புகார்களை 81900-00100 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பலாம் என்றும், புகார் அளிப்பவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பெறப்படும் புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை உறுதியளித்துள்ளது.

இந்த முயற்சி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனையில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...