கோவை வழியாக செல்லும் கச்சிகுடா எக்ஸ்பிரஸ் முர்தேஸ்வர் வரை நீட்டிப்பு

சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் கச்சிகுடா-மங்களூர் ரயிலை கர்நாடகாவின் முர்தேஸ்வர் வரை நீட்டித்துள்ளது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக வாரத்தில் இருமுறை இயக்கப்படும்.


கோவை: சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் கச்சிகுடா-மங்களூர் ரயிலை கர்நாடகாவின் முர்தேஸ்வர் வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக வாரத்தில் இருமுறை இயக்கப்படும்.

வண்டி எண் 12789 கச்சிகுடாவில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6:05 மணிக்குப் புறப்பட்டு முர்தேஸ்வரை அடுத்த நாள் பகல் 2:05 மணிக்குச் சென்றடையும். இந்த ரயில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் திருப்பூரை நள்ளிரவு 12:03 மணிக்கும், கோவையை நள்ளிரவு 1:12 மணிக்கும் வந்தடையும்.

வண்டி எண் 12790 முர்தேஸ்வரில் இருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 3:30 மணிக்குப் புறப்பட்டு, கச்சிகுடாவை அடுத்த நாள் இரவு 11:40 மணிக்குச் சென்றடையும். இந்த ரயில், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கோவையை அதிகாலை 3:52 மணிக்கும், திருப்பூரை அதிகாலை 4:43 மணிக்கும் வந்தடையும்.

இந்த நீட்டிப்பு பயணிகளுக்கு மேலும் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கர்நாடகாவின் முர்தேஸ்வருக்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...