கோவை மாநகராட்சி 27-வது வார்டில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை மாநகராட்சி 27-வது வார்டில் பீளமேடு பகுதியில் நடைபெற்ற மாஸ் கிளீனிங் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு செய்தார். குப்பை சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளை நேரடியாக கண்காணித்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சி 27வது வார்டு பீளமேடு பாரதி காலனி பிரதான சாலை பகுதியில் மாஸ் கிளீனிங் நடைபெற்றது. இந்த தூய்மைப் பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கவுன்சிலர் அம்பிகா தனபால், சாக்கடை மற்றும் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் அனைத்தையும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மைப் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார். மேலும், பகுதியில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்றுமாறு வலியுறுத்தினார்.



பீளமேடு கோபால் நகர், லால் பகதூர் காலனி, சிரூங்கார் நகர் ஆகிய பகுதிகளிலும் கவுன்சிலர் ஆய்வு மேற்கொண்டார். இங்கு தினசரி குப்பை வாங்கும் ஆட்டோக்கள் சரியாக வருகின்றனவா என்பதை நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்தார்.



குப்பைகள் அனைத்தையும் முழுமையாக சேகரிக்குமாறும், சாலையோரத்தில் உள்ள குப்பைகளை முற்றிலுமாக அகற்றுமாறும் தூய்மைப் பணியாளர்களுக்கு கவுன்சிலர் அம்பிகா தனபால் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் மூலம் வார்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்துள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...