50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரித்து வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் 5 கிலோ அரிசியில் தொடங்கி இன்று 30 கிலோவாக அதிகரித்துள்ளது. 150 பேருக்கு மேல் பிரியாணி வழங்கும் இந்த அன்பு மரபு மதம் கடந்த நட்பை உருவாக்குகிறது.


Coimbatore: இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாத விரதம் நிறைவடைந்து இன்று ரமலான் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு நாளில் திருப்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் அன்பின் மரபு அனைவரையும் கவர்ந்துள்ளது.

திருப்பூர் கல்லூரி சாலை ஐயப்பன் கோவில் வீதியைச் சேர்ந்த பாத்திமாபீவி குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் பண்டிகை நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரித்து வழங்கி வருகின்றனர். இஸ்லாமிய மார்க்கத்தில் ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை கொடையாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கடைபிடிக்கும் வகையில் இந்த குடும்பம் பண்டிகை நாளிலும் பிரியாணி தயாரிப்பில் மூழ்கி அதனை பகிர்ந்து கொள்கின்றனர்.




இதுகுறித்து பாத்திமாபீவி பேசுகையில், "என் திருமணம் நடந்த நாள் முதல் இன்று வரையிலும் இந்த மரபை தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். ஆரம்ப காலத்தில் என் கணவர் மட்டும் வேலைக்கு சென்ற போது, வெறும் 5 கிலோ அரிசியில் பிரியாணி செய்து நண்பர்களுக்கு வழங்கினோம். இன்று என் மகள்கள், மருமகன்கள் அனைவரும் இணைந்து 30 கிலோ அரிசியில் பிரியாணி தயாரித்து 150-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறோம்" என்றார்.




மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், "அடுத்த ஆண்டு என் மகன்கள் மூலம் இதை இன்னும் அதிகரித்து 40 கிலோ அரிசியில் பிரியாணி செய்து வழங்க வேண்டும் என்பது என் ஆசை. ஒவ்வொரு இஸ்லாமியரும் தாங்கள் சம்பாதித்ததில் ஒரு பகுதியை கொடைக்கு ஒதுக்க வேண்டும் என்ற மார்க்க நெறியை நாங்கள் இன்றளவும் கடைபிடித்து வருகிறோம்" என்று கூறினார்.


பிரியாணி வழங்குவதில் கிடைக்கும் மகிழ்ச்சி பற்றி பேசிய குடும்பத்தினர், "இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பிரியாணி என்பது வெறும் உணவு அல்ல, அது அன்பை பரிமாறும் ஊடகம். இது மதம் கடந்த நட்பை உருவாக்குகிறது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


ரமலான் திருநாள் நாளில் கூட ஓய்வெடுக்காமல் நண்பர்களுக்காக பிரியாணி தயாரிப்பதை தங்கள் கடமையாக கருதும் இந்த குடும்பத்தினரின் அன்பு செயல், கொடுப்பதில் கிடைக்கும் உண்மையான மகிழ்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 5 கிலோவில் தொடங்கி 30 கிலோவாக வளர்ந்துள்ள இந்த அன்பின் பயணம், தலைமுறைகளைக் கடந்து தொடர்வது சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு அழகிய உதாரணமாக விளங்குகிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...