கோவையில் பாதுகாப்பு நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் நகை, பணம் கொள்ளை

கோவை மாவட்டம், நஞ்சுண்டாபுரம் அருகே அமைந்துள்ளது பார்ஸன் அடுக்குமாடி குடியிருப்பு. முக்கிய பிரமுகர்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களிலும் தனியார் பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பார்ஸன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து திருப்பூரில் பனியன் ஏற்றுமதி செய்துவரும் சிவானந்த் (38) என்பவர் தனது குடும்பத்தினருடன் வெளிமாநிலத்திற்கு சென்றுவிட்டு விட்டிற்கு திரும்பிவந்துள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 28 பவுன் நகை மற்றும் 1.25 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு மெற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த இராமநாதபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்புகள் நிறைந்த அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்றுள்ள இந்த திருட்டு அந்தக் குடியிருப்பில் வசிப்போர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...