கோவை உக்கடம் மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை உயர்வு

கோவை உக்கடம் லாரிப்பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் மீன்கள் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. ரம்ஜான் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டமும் அதிகரித்தது. வஞ்சிரம் கிலோ ரூ.900 வரை விற்பனையானது.


Coimbatore: கோவை உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் மொத்த மீன் மார்க்கெட்டில் மீன்களின் வரத்து குறைந்ததால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் இந்த மார்க்கெட்டிற்கு மீன்கள் வந்து சேருகின்றன.




ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் செயல்படும் இந்த மொத்த மீன் மார்க்கெட்டிற்கு கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து மீன் வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர். மீன் விலை குறைவாக கிடைக்கும் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும் இங்கு நேரடியாக மீன் வாங்க வருகின்றனர்.




இந்த நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து வரும் மீன்களின் வரத்து தற்போது கணிசமாக குறைந்துள்ளது. மேலும், ரம்ஜான் பண்டிகை முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வரத்து குறைவு மற்றும் கூட்டம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்திருந்தது.




நேற்று மீன் மார்க்கெட்டில் வஞ்சிரம் மீன் கிலோவிற்கு ரூ.900, சின்ன ஊழி ரூ.400, அயிலை ரூ.300, மத்தி ரூ.300, இறால் ரூ.550, கிளி மீன் ரூ.500, விலை மீன் ரூ.300, திருக்கை ரூ.250, கொடுவாய் ரூ.600, கண்ணாடி பாறை ரூ.130 என விற்பனையானது.




இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "வழக்கமாக வாங்கும் விலையை விட மீன்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுதவிர கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரை சுத்திகரிப்புக் கட்டணமும் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. இதனால் ஏமாற்றமே மிஞ்சியது" என்று தெரிவித்தனர்.




இதுபற்றி மீன் வியாபாரிகள் கூறுகையில், "கேரளாவில் இருந்து வரும் மீன்களின் வரத்து கணிசமாக குறைந்துள்ளது. வரத்து குறைந்துள்ளதால் மட்டுமே விலை அதிகரித்துள்ளது. ஒரு சில வாரங்களில் மீன்களின் வரத்து அதிகரித்து விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...