MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்காளர் சங்க செயலாளர் ஜலபதி விளக்கம் அளித்துள்ளார்.

Coimbatore:

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகைகளை காலவரையறைக்குள் செலுத்தாதால், அந்த செலவுக்கான வருமான வரிச் சலுகை மறுக்கப்படும் அபாயம் உள்ளது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பட்டய கணக்காளர் சங்கத்தின் செயலாளர் ஜலபதி தெரிவித்துள்ளார்.

2025-26 நிதியாண்டு முடிவை முன்னிட்டு, வருமான வரிச் சட்டம் 43B(h) பிரிவின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். இந்த பிரிவு MSMED சட்டம், 2006-ன் பிரிவு 15-உடன் தொடர்புடையதாகும்.

ஒரு நிறுவனம் Micro அல்லது Small MSME நிறுவனத்திடம் இருந்து பொருட்கள் அல்லது சேவைகள் பெற்றிருந்தால், அதற்கான தொகையை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும். இல்லையெனில், அந்த செலவு அந்த ஆண்டில் வரிச் சலுகைக்காக அனுமதிக்கப்படாது; பணம் செலுத்தப்படும் ஆண்டில்தான் அதை கோர முடியும்.

ஒப்பந்தம் இருந்தால் விலைப்பட்டியல் தேதியிலிருந்து 45 நாட்களுக்குள், ஒப்பந்தம் இல்லையெனில் 15 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இந்த காலக்கெடு மீறப்பட்டால் வரிச் சுமை அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

இந்த விதி MSME பதிவு பெற்ற Micro மற்றும் Small நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். Medium நிறுவனங்களுக்கு இது பொருந்தாது. மேலும் வணிகர்கள் (Traders) மீது இந்த விதி அமலில்லை எனவும் விளக்கப்பட்டது.

உதாரணமாக, ஒரு நிறுவனம் ₹3,00,000 மதிப்பில் வாங்கிய பொருளுக்கான கட்டணத்தை மார்ச் 31, 2026க்குள் செலுத்தினால் அந்த செலவு FY 2025-26ல் ஏற்கப்படும். ஆனால் அதே தொகை ஏப்ரல் 2026ல் செலுத்தப்பட்டால், அந்த ஆண்டில் செலவாக ஏற்கப்படாது; வரிச் சுமை கூடும்.

இதனால், தொழில் முனைவோர் மார்ச் 31க்குள் MSME நிலுவைத் தொகைகளை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் MSME விற்பனையாளர்களின் Udyam பதிவு விவரங்களை சரிபார்த்து, நிலுவைத் தொகை பட்டியலை தயார் செய்து, கணக்குப் புத்தகங்களை புதுப்பித்து ஆதாரங்களை பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வரிச் சட்டங்கள் சிக்கலானவை என்பதால், தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப வருமான வரி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...