Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்ததை அடுத்து, கோவையில் தவெக மகளிர் அணியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து உடனடி கைது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.


Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj, தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பலரது கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் Vijay நேரடியாக DGP அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மகளிர் அணி சார்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கோவையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்சியின் கோவை தெற்கு மாவட்டம் மற்றும் புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் Vignesh புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் Rajkumar தலைமையில் மகளிர் அணியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் Ponraj மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.


தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் நிர்வாகிகளை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த Ponraj மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தின் கோவை தெற்கு மாவட்டம் மற்றும் புறநகர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டது.


இது குறித்து பேட்டி அளித்த Vignesh தமிழக வெற்றி கழகத்திற்கு பெண்கள் ஆதரவு அதிகம் உள்ளதால் DMK வினரும் DMK வை சார்ந்தவர்களும் இதுபோன்று விமர்சனங்களை முன் வைப்பதாக குற்றம் சாட்டினார். இது போன்று பெண்கள் குறித்த ஆபாசமாக பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் Ponraj ஐ உடனடியாக கைது செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...