கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொண்டர்களுடன் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுவை அளித்தார். மூன்றாவது முறையாக போட்டியிடும் அவர் வெற்றி நம்பிக்கை தெரிவித்தார்.


Coimbatore: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக 234 தொகுதிகளிலும் இன்று ஒரே நாளில் அக்கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.




இன்று மதியம் கட்சித் தொண்டர்களுடன் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்த கலாமணி ஜெகநாதன், கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். வடக்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் வினோத் குமாரிடம் மனுவை அளித்தார்.




தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கலாமணி ஜெகநாதன், "நான் மூன்றாவது முறையாக இதே தொகுதியில் போட்டியிடுகிறேன். ஏற்கனவே உள்ள சட்டமன்ற உறுப்பினர் தொகுதிக்கே வருவதில்லை. எனவே எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்று தெரிவித்தார்.




மேலும் அவர், "ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார். வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.




நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்க முயற்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...