பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பார்க் கல்வி குழுமங்களின் CEO Dr. அனுஷா ரவி தலைமையேற்றார். மாணவர்களுக்கு வினாடி வினா, பேச்சு, ஓவிய போட்டிகள் நடந்தன. 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.


Coimbatore: கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியின் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறை சார்பாக உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பார்க் கல்வி குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி Dr. அனுஷா ரவி தலைமையேற்று உரையாற்றினார்.

விழாவில் பொறியியல் கல்வி பயில்கின்ற அனைத்து துறை மாணவர்களும் கலந்து கொண்டனர். Dr. அனுஷா ரவி தனது உரையில், தண்ணீரின் முக்கியத்துவம், அதை சேமிப்பது, பாதுகாப்பது குறித்தும், மரங்களை நட்டு புதிய வனங்களை உருவாக்குவது, இருக்கின்ற வளங்களை பாதுகாப்பது குறித்தும் மாணவர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.



விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கல்லூரியின் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறையின் முன்னாள் மாணவர் மற்றும் TUV இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டாளர் ரஞ்சித் குமார் சின்னசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதில் சுற்றுப்புற சூழல் பொறியியல் துறை மாணவர்களின் பங்களிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

உலக தண்ணீர் தினம் மற்றும் வனங்கள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியருக்கு வினாடி வினா, பேச்சு போட்டி, ஓவிய போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் கல்லூரியின் முதல்வர் Dr. கே குமரேசன் வாழ்த்துரை வழங்கினார்.



விழாவை சுற்றுப்புற சூழல் பொறியியல் துறையின் தலைவர் Dr. சி அங்காளபரமேஸ்வரி, துணைத்தலைவர் Dr. ஆர் ஹரிஷ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஏ ராஜா மற்றும் ஆசிரியர் பெருமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவின் போது விருந்தினர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் 100 மரக்கன்றுகளை நட்டு விழாவை சிறப்பித்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளைய தலைமுறையின் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...