கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தில் இரு தினங்கள் சேவை வழங்கப்படும். 15 நாட்கள் மட்டும் இச்சேவை செயல்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு நேரடி விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர், அபுதாபி ஆகிய மூன்று வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக அபுதாபிக்கு மட்டும் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.





கோவை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவிற்கு வழக்கம் போல் விமானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவையிலிருந்து குவைத் நாட்டிற்கு நேரடி விமான சேவை Jazeera என்ற ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, கோவையிலிருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் விமான சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தில் இரு தினங்கள் சேவை வழங்க வாய்ப்புள்ளது. தற்போது அந்த நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள விமான சேவை நேரம் மாற்றி அமைக்க வேண்டி உள்ளது.





இந்த பணிகள் நிறைவடைந்த பின் அதிகாரப்பூர்வமாக கோவை-குவைத் இடையே விமான சேவை தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இந்த விமான சேவை நிரந்தரமானது அல்ல. 15 நாட்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வமாக பின்னர் வெளியிடப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கரூர் 41 உயிரிழந்தோருக்கு அரசு வேலை: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...