100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று செம்மொழி பூங்கா வரை பேரணி சென்றது.


Coimbatore: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து இந்த பேரணியைத் தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், ஏர் பலூனில் பறந்து மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், தேர்தல் உறுதிமொழி ஏற்பு, கல்லூரி மாணவர்களின் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி இன்று மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு வாகன பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் பேரணி சென்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அவிநாசி சாலை, எல்லை அம்மன் கோவில், காந்திபுரம் வழியாக செம்மொழி பூங்கா வரை சென்று நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் பொதுமக்களிடம் நூறு சதவீத வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதையும், ஒவ்வொரு வாக்கும் மதிப்புமிக்கது என்பதையும் எடுத்துரைத்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த பேரணியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...