காணொளி காட்சி மூலம் ரூ.28 கோடியே 51 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை தமிழக முதலமைச்சர் கோவையில் திறந்து வைத்தார்


கோவை மாவட்டத்தில் வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் சுகுணாபுரம் பகுதியில் ரூ.4.33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 64 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குறிஞ்சி நகர் திட்டப் பகுதியில் 10.69 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 160 குடியிருப்புகளையும், 1.72 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய சரக அலுவலக கட்டிடத்தையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளி காட்சி முலம் துவக்கி வைத்தார்.



மேலும், வீட்டுவசதி வாரியம் மூலம் பொள்ளாச்சி வட்டம், சின்னம்பாளையம் கிராமத்தில் அரசு அலுவலர்களுக்கு 11.77 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 108 அடுக்குமாடி வாடகை குடியிருப்புகளையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொளி காட்சி மூலம் கோவையில் துவக்கி வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக தமிழக அரசின் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...