தொண்டாமுத்தூர் தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தொண்டாமுத்தூர் ரவி தீவிர பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொண்டாமுத்தூர் ரவி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரி பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.


Coimbatore: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் இன்று தீவிர தேர்தல் பரப்புரை நடைபெற்றது. இப்பரப்புரையில் தொண்டபுத்தூர் ரவி முன்னின்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கோரி பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து பேசினார்.










ஆர்.எஸ்.புரம் பகுதி கழகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த பரப்புரையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக பங்கேற்றனர். வேட்பாளர் N.R.கார்த்திகேயனின் சார்பாக வாக்காளர்களிடம் வாக்குறுதிகளை எடுத்துரைத்து, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.










இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றியம், பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். மேலும், தேர்தல் பொறுப்பாளர்கள், BLA2, BLC, BDA போன்ற பிரிவுகளின் உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.










மகளிர் அணியினர், கழகத்தின் மூத்த முன்னோடிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாக இந்த தேர்தல் பரப்புரை நிகழ்வில் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இப்பரப்புரையின்போது வாக்காளர்களிடம் தொண்டாமுத்தூர் தொகுதியின் வளர்ச்சி குறித்தும், கூட்டணியின் திட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...