சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்க்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அன்சாரி மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Coimbatore: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக இன்று ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.








இந்த வாக்கு சேகரிப்பு பணியில் சிங்காநல்லூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அன்சாரி, 28 இ வட்டக் கழக பொறுப்பாளர் பாலமுரளி கிருஷ்ணன், மகளிர் அணி அன்பரசி, ஆவாரம்பாளையம் பகுதி தகவல் தொழில்நுட்ப அணி பிரேம்குமார், அகமது பாஷா ஆகியோர் பங்கேற்றனர்.








மேலும் BLA-2, BLA-C, BDA மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் இந்த வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த வாக்காளர் பெருமக்களை நேரில் சந்தித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கொள்கைகள் குறித்து விளக்கினர்.






வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக பரவலாக வாக்கு சேகரிப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். தேர்தல் நாளில் கை சின்னத்திற்கு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...