கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித் தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.


Coimbatore: கோவை மாநகர் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ராமநாதபுரம் பகுதி வார்டு எண் 66 உட்பட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்தார்.








கொண்டசாமி லே-அவுட், புளியகுளம், அண்ணா நகர் 1வது வீதி, அண்ணா நகர் 2வது வீதி, அண்ணா நகர் 3வது வீதி, அம்மன் குளம் வடக்கு பகுதி, G.H. காலனி 1வது வீதி, G.H. காலனி 2வது வீதி, அம்மன் குளம் ரோடு AIRTEL ஆபிஸ் ரோடு, ராஜீவ் நகர், பழைய ஹவுசிங் யூனிட், எரிமேடு முதல் பகுதி, புது ஹவுசிங் யூனிட், எரிமேடு இரண்டாவது பகுதி மற்றும் பாலசுப்பிரமணியம் நகர் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.






வாக்கு சேகரிப்பின்போது அம்மன் கே.அர்ஜுனன் பேசியதாவது: "நிர்வாகத் திறனற்ற Stalin தலைமையிலான DMK ஆட்சியில், கடந்த ஐந்தாண்டு காலமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விஷம்போல் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட குடும்பச் செலவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது."






"மக்களின் இந்தச் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறப்பு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க இந்த நிதி உதவி பயன்படும்" என்று அவர் தெரிவித்தார்.






இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், அதிமுக ஆட்சி அமைந்தால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். வாக்கு சேகரிப்பில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருடன் இருந்தனர்.


Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...