ஆனைமலை வனப்பகுதியில் வசிக்கும் மக்களை ஒருமையில் பேசிய வட்டாட்சியர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு



கோவை மாவட்டம் ஆனைமலை வனப்பகுதிகளில் வாழும் மலைகிராம பழங்குடி மக்களை ஒருமையில் பேசிய வட்டாசியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

நீதிமன்ற உத்தரவு படி பழங்குடி சட்டமான வன உரிமை சட்டத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொள்ளாச்சி ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான வட்டாச்சியர் அலுவலகத்தில் சர் ஆட்சியர் தலைமையில் கடந்த 8 ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது.

ஆனைமலை வனப்பகுதிகளில் 17 மலைகிராமங்கள் உள்ள நிலையில், இந்த கூட்டம் தொடர்பான தகவலை மலை கிராம மக்களுக்கு தெரிவிக்காமல் அரசு அதிகாரிகள் ஒரு சில மலை கிராம மக்களை கொண்டு நடத்தி உள்ளனர். ஆனால், 17 கிராம மக்களையும் அழைத்தது போல் போலியாக பதிவிட்டுள்ளனர். 

மேலும், கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போல் மலைகிராம மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு பதிவும் நடைபெற்றுள்ளது. இது தெரிந்த பிறகு விண்ணப்பங்களை பெற மலை கிராம மக்கள் சென்று கேட்ட போது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான வட்டாச்சியர் சக்திவேல் "நீங்கள் மலைகிராமத்தில் இருப்பதால் எந்த பயனும் இல்லை. உங்களுக்கு படிக்க தெரியுமா" என பல்வேறு விதமாக ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. 

இதைத்தொடர்ந்து, ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கான வட்டாச்சியர் சக்திவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மற்றும் பழங்குடியினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...