வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.


கோவை:கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், காலில் ஏற்பட்ட புண் காரணமாக சிகிச்சை பெற்று வந்த வானதி சீனிவாசன், பூரண குணமடைந்து நாளை வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி, இன்று ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு வானதி சீனிவாசன் வீடு திரும்பியுள்ளார்.

மருத்துவமனையிலிருந்து நேரடியாக தொண்டாமுத்தூர் அருகே உள்ள உலியம்பாளையத்தில் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். அங்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்து அவரை வீட்டிற்குள் வரவேற்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உடல்நலம் தேறி வீடு திரும்பிய வானதி சீனிவாசனுக்கு உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் வீட்டிலுள்ள பூஜை அறையில் சாமி கும்பிட்டு வேண்டுதல் நிறைவேற்றினார். அவரது பூரண நலனுக்காக குடும்பத்தினரும் சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்.

சிகிச்சைக்குப் பிறகு விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. நாளை பிரதமர் நரேந்திர மோடி கோவை வருகை தர உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே வானதி சீனிவாசன் வீடு திரும்பியது பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...