கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்றும் ரூ.2,000 மதிப்பிலான டோக்கன்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Coimbatore: கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், அதிமுகவினர் வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்றும் ரூ.2,000 மதிப்பிலான டோக்கன்களை வழங்கி வருவதாக தகவல் கிடைத்தது.



இதையடுத்து, அங்கு சென்ற திமுகவினர், டோக்கன்கள் வழங்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் கையும் களவுமாக பிடித்து, அந்த டோக்கன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த டோக்கன்கள், அதிமுக முன்னாள் ஊராட்சி கவுன்சிலர் குமார் தலைமையில் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால், கவுண்டம்பாளையம் தொகுதியில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் பிஆர்ஜி அருண்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சூரியகுமார்போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...