கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பேசினார். மலையாளி மக்களின் உரிமைகளுக்காகவும் மத்திய திட்டங்கள் தடையின்றி செயல்படவும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


Coimbatore: கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி கணபதி பகுதியில் கோயம்புத்தூர் மலையாளி கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய இணை அமைச்சரும் பிரபல மலையாளத் திரைப்பட நடிகருமான சுரேஷ் கோபி கலந்துகொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்துப் பேசினார்.



கோவையில் வசிக்கும் மலையாளி மக்களின் உரிமைகளுக்காகவும், மத்திய அரசின் திட்டங்கள் தடையின்றிச் சேரவும், தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.



மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆற்றிய உரை, அங்கு கூடியிருந்த மலையாளி மக்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி, மலையாள சமூகத்தினரிடம் பேசியபோது, வானதி சீனிவாசனின் தலைமையில் கோவை வடக்கு தொகுதி மேலும் வளர்ச்சியடையும் என நம்பிக்கை தெரிவித்தார்.



இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசனும் கலந்துகொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து உரையாற்றினார். கேரள கலாச்சாரத்தோடும் மக்களோடும் உணர்வுப்பூர்வமான பிணைப்பைக் கொண்டுள்ள வானதி சீனிவாசன், கோவை வடக்கின் வளர்ச்சிக்காக பாடுபடுவார் என அவர் தெரிவித்தார்.



மலையாளி சமூகத்தினர் கோவையில் குறிப்பிடத்தக்க அளவில் வசித்து வருகின்றனர். அவர்களின் வாக்குகள் கோவை வடக்கு தொகுதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில், பிரபல மலையாள நடிகரும் அமைச்சருமான சுரேஷ் கோபியின் பிரசாரம், BJP வேட்பாளருக்கு மலையாளி வாக்காளர்களின் ஆதரவைப் பெற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் கலந்துகொண்ட மலையாளி சமூகத் தலைவர்கள், மத்திய அரசின் நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதித்தனர். கோவை வடக்கு தொகுதியின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் ஆதரவு அவசியம் என்பதை வலியுறுத்தி பேசப்பட்டது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...