பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட நெறையூர் கிராம மக்கள் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், குண்டடம் ஒன்றியத்திற்குட்பட்ட சடையாபாளையம் பஞ்சாயத்தின் எல்லைக்குள் உள்ள நெறையூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.



பல ஆண்டுகளாக கிராமத்தில் குடிநீர் வசதி, தண்ணீர் சேமிப்பு தொட்டி, சாலை வசதி, போக்குவரத்து வசதி, இடுகாடு வசதி மற்றும் நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் செய்யப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.



குடிநீர் வசதி இல்லாததால், 20 லிட்டர் கேன்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து பலமுறை அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் கூட வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இதனால் விரக்தியடைந்த கிராம மக்கள், வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து, “அடிப்படை வசதிகள் இல்லையெனில் தேர்தல் வேண்டாம்” எனக் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால்தான் இயல்பான வாழ்க்கை நடத்த முடியும். தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நெறையூர் கிராமத்தை காப்பாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...