கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது. டீன் கீதாஞ்சலி இது குறித்து விளக்கினார்.


Coimbatore: கோவையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அழற்சி பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது.




கோவையில் ஏப்ரல் 27 நிலவரப்படி அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இம்மாத துவக்கத்தில் இருந்தே வெப்பத்தின் தீவிரம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் வெளியில் அதிக நேரம் செலவிடுவோர் ஹீட் ஸ்ட்ரோக் எனும் வெப்ப அழற்சி பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.




திடீரென உடல் வெப்பநிலை அதிகரித்தல், அதீத தாகம், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளுடன் சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக காய்ச்சல், தலைவலிக்காக அரசு மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.




இந்நிலையில், Heat Stroke பாதிப்புக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் 10 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் கீதாஞ்சலி தெரிவித்தார். அவர் மேலும் விளக்குகையில், "அவசர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் ORS தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. புதிதாக துவங்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவிலும் 10 லிட்டர் ORS தண்ணீர் வைக்கப்படும்" என்றார்.




"காய்ச்சல் இருந்தால் மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் உரிய சிகிச்சை பெறுவது அவசியம். குறிப்பாக குழந்தைகளுக்கு பழைய மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. ஆறு மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கு drops மட்டுமே கொடுக்க வேண்டும். இது அடர்த்தி அதிகமாக இருக்கும் என்பதால் பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே கொடுக்க வேண்டும்" என்று டீன் கீதாஞ்சலி வலியுறுத்தினார்.




"சிலர் அடர்த்தி குறைவாக இருக்கும் syrup அளவை மாற்றி drops ஆக கொடுக்கின்றனர். அளவுக்கதிகமான மருந்து கொடுப்பது ஆபத்தில் முடியலாம். இதனால் மருந்து கொடுக்கும் போது அளவீட்டை சரிபார்ப்பது மிக அவசியம்" என்று டீன் கீதாஞ்சலி எச்சரித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...