எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக செயல்பட்ட தி.மு.க., இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டு, மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடும் என்று தெரிவித்துள்ளார்.


சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவில், தி.மு.க. பெரும் தோல்வியைத் தழுவியுள்ளது. அதே நேரத்தில், விஜயின் தமிழக வெற்றி கழகம் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு புதிய கட்சிக்கு இத்தகைய ஆதரவு கிடைத்துள்ளது நாடு தழுவிய பேசு பொருளாக மாறியுள்ளது.

கூடுதலாக, தி.மு.க. தலைவரான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவியிருப்பது கட்சியினரிடையே கூடுதல் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்:

“மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடையச் செய்தோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளை எடுத்துரைத்தே வாக்குகளை கேட்டோம்.

மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடர வேண்டும் என்பதற்காகவே வாக்கு கேட்டு பரப்புரை செய்தோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காமல் இருந்தவர்களையும் சேர்த்தே நான் ஆட்சி நடத்தினேன்.

அனைத்து மக்களிடமும் உண்மையுடன் இருந்தேன். என் மனச்சாட்சிப்படி செயல்பட்டேன்.

என் சக்திக்கு மீறியும் உழைத்தேன். என்னைப் போலவே tireless-ஆக உழைத்த, என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

எனது அரசியல் பொதுவாழ்வில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.

எனவே, இலட்சியமும் கொள்கையும் தான் முக்கியம்; வெற்றி, தோல்விகள் மட்டும் அல்ல என்பதில் உறுதியாக செயல்படுகிறவன் நான்.

அதனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் எந்தத் தடையும் இன்றி தொடரும்.

இதுவரை மக்களுக்காக சிறப்பான ஆளும் கட்சியாக செயல்பட்ட தி.மு.க., இனி சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டு, மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடும்.” என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...