கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்வரத்து மற்றும் வெளியேற்ற விவரங்கள் வெளியிடப்பட்டன.


Coimbatore:

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளில் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



ஆனைமலை அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. டிசம்பர் 5 நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 62.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 122 கன அடி நீர் வரத்து பதிவாகியுள்ள நிலையில், 368 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 36.05 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 93 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், 1070 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்மட்டம் தற்போது 10.6 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 கன அடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து 5 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்மட்டம் 20.01 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 17 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில், 50 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்மட்டம் 32.2 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 790 கன அடி நீர் வரத்து பதிவாகியுள்ள நிலையில், 630 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மழை தொடரும் பட்சத்தில் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும், நீர்வரத்து நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...