கோவை மக்களின் தாகம் தீர்க்க களமிறங்கிய ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம்-யின் "தாகம் தீர்ப்போம்"

கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரேடியோ சிட்டி 91.1 பொழுதுபோக்கிற்கான பாடல்களை மட்டும் ஒளிபரப்பாமல் தனது பல்வேறு செயல்பாடுகள் மூலம் நாடி நரம்பு எல்லாம் கோவை சிட்டி என்றடிப்படையில் மக்களுக்கு சேவையினையும் வழங்கி வருகிறது. 



இந்நிலையில், தமிழகம் முழுவதும் நிலவி வரும் வறட்சியால் மக்கள் குடிக்க நீரின்றி தவித்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தாலும் அவை முழுமையாக பொதுமக்களுக்கு சென்றுசேர்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும், வசதிபடைத்தோர், நடுத்தர வர்க்கத்தினர் விலைகொடுத்து லாரி உள்ளிட்டவற்றின் மூலம் தண்ணீரை பெற்று விடுகின்றனர். ஆனால், அடிமட்ட மக்கள், குடிசைப்பகுதி மக்களால் அவ்வாறு விலைகொடுத்து நீரை வாங்கும் நிலை இல்லாமலேயே உள்ளது.

இந்நிலையில் கோவை மக்களின் தாகம் தீர்க்க களமிறங்கியுள்ளது ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம். இதற்காக "தாகம் தீர்ப்போம்" என்னும் திட்டத்தை துவங்கியுள்ள ரேடியோ சிட்டி அடிமட்ட, குடிசைவாசிகள் வசிக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிப்பதே இத்திட்டமாகும். 

இதுகுறித்து, ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம் மண்டல திட்ட இயக்குநர் கே.பிரபு கூறுகையில், தற்போது தமிழகம் முழுவதும் வறட்சி நிலவி வரும் நிலையில் கோவை உள்ளிட்ட பெரிய மாநகரகங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகளவில் நிலவி வருகிறது. இதனை போக்க "தாகம் தீர்ப்போம்" என்னும் திட்டம் துவங்கப்பட்டு அதற்காக 7200 911 911 என்னும் வாட்ஸ்அப் எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் இந்த எண்ணிற்கு தொடர்புகொண்டு தங்கள் பகுதியில் நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து தகவல் அளிக்கும் பட்சத்தில் அப்பகுதிக்கு தாகம் தீர்ப்போம் குழுவினர் சென்று உண்மைநிலையினை கண்டறிவர். இதைத்தொடர்ந்து, அப்பகுதிக்கு தாகம் தீர்ப்போம் குழுவினர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும். எங்களுடன் சியாம் சுந்தரம் தண்ணீர் விநியோகம் செய்யும் நிறுவனத்தினர் இணைந்து மக்களுக்கு தேவையான தண்ணீரினை வழங்கி வருகின்றனர்.

இத்திட்டத்தினை தற்போது 91 பகுதியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, நேற்று (மே 11) கே.கே.புதூர் பகுதியில் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், இத்திட்டத்தை வரும் காலங்களில் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் செயல்படுத்த உள்ளோம்" என தெரிவித்தார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...