ப்ளஸ்-2 பொதுத் தேர்வு: கோவை மாநகராட்சி பள்ளிகளில் 91.80 சதவிகிதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி


கோவை மாநகராட்சியில் உள்ள 16 மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 2206 மாணவ, மாணவியர்களில் 2025 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று, 91.80 தேர்ச்சி சதவிகிதம் பெற்றுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் கடந்த மார்ச் 2017-ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2206 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர்.

இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 12) வெளியிடப்பட்டன. இதில் 2025 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16 மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 91.80 ஆகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.94, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.03. இது சென்ற ஆண்டு தேர்ச்சி சதவீதத்தைவிட 3 சதவீதம் அதிகமாகும்.

மேலும், பீளமேடு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த பள்ளி கடந்த ஆண்டும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடந்து வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.82 தேர்ச்சி சதவீதமும், ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 98.55 தேர்ச்சி சதவீதமும், மாநகராட்சி பா.கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி 97.74 தேர்ச்சி சதவீதமும், இர.ச.புரம் (மேற்கு) மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.20 தேர்ச்சி சதவீதமும், இராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 95.79 தேர்ச்சி சதவீதமும் பெற்றுள்ளன.

மேலும், செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 95.29 தேர்ச்சி சதவீதமும், ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 94.53 தேர்ச்சி சதவீதமும், மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 93.45 தேர்ச்சி சதவீதமும், மாநகராட்சி சிட்டி மேல்நிலைப்பள்ளி 90.22 தேர்ச்சி சதவீதமும், சித்தாபுதூர் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 89.47 தேர்ச்சி சதவீதமும், அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 88.69 தேர்ச்சி சதவீதமும் பெற்றுள்ளது.

இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 85.63 தேர்ச்சி சதவீதமும், உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி 84.51 தேர்ச்சி சதவீதமும், இராமநாதபுரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 80.56 தேர்ச்சி சதவீதமும், இர.ச.புரம் மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி 69.72 தேர்ச்சி சதவீதமும் ஆகமொத்தம் 16 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 91.80 ஆகும்.

மேலும் பாடப் பிரிவுகளில் கணக்குப் பதிவியலில் 9 மாணவ, மாணவியர்களும், வணிகவியலில் 38 மாணவ, மாணவியர்களும், பொருளியலில் 4 மாணவ, மாணவியர்களும், வணிக கணிதத்தில் 2 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 53 மாணவ, மாணவியர்கள் முழு மதிப்பெண்ணான 200-க்கு 200 பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் 2016-ல் நடைபெற்ற பொதுத் தேர்வின் பாடப் பிரிவுகளில் 19 மாணவ, மாணவியர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர்.

மேலும், மாநகராட்சிப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இம்மாணவ, மாணவியர்களை ஊக்குவித்து, வழிநடத்திய பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...