நீட் தேர்வினை எதிர்கொள்ள தமிழக பாடதிட்டங்கள் மாற்றப்படும்- கோவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

கல்வித்துறையில் பாடதிட்டங்கள் மாற்றுவது குறித்து உயர்மட்ட குழு கருத்துக்களை வழங்கி இருப்பதாகவும், நீட் தேர்வினை எதிர்கொள்வதற்கு ஏற்றபடி தமிழக பாடதிட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பள்ளி கல்வியில் ரேங்கிங் முறை என்ற மக்களின் நீண்ட நாள் கனவு தற்போது நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கும் தமிழகத்தின் இந்த திட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கின்றது.

மாணவர்கள் அனைவருக்கும் செல்போன் மூலம் தேர்வு முடிவு குறித்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தி ஒரு சிலருக்கு மட்டும் செல்லாமல் இருக்கலாம். தேர்வு முடிவு வருவதற்கு முன்னரே புதிய நடைமுறையை அறிவித்தால் மட்டுமே மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்பதால் நேற்று புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய நடைமுறையினால் மாணவர்களும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மாணவர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதற்காக தரவரிசை என்ற புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டது. மேலும் புதிய பாடத்திட்டம் குறித்து உயர்மட்ட குழு கருத்துக்களை வழங்கி இருக்கிறது. அதனை செயல் படுத்துவது குறித்து ஆலோசிக்கபட்டு வருகிறது. தமிழக கல்வி திட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாரத பிரதமரின் துறையின் மூலமாகவே நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்த மனுவினை ஜனாதிபதிக்கு அனுப்ப இயலும். நீட் தேர்வினை எதிர்கொள்வதற்கு ஏற்றபடி தமிழக பாடதிட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். நீட் தேர்வில் கேள்விகள் மாற்றி கேட்கப்பட்டது குறித்து மத்திய அரசுதான் பதில் அளிக்க வேண்டும்" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார்.

இதைத்தொடர்ந்து, இரு அணிகள் இணைப்பிற்கு அமைச்சர்கள் சீனிவாசனும், ஜெயகுமாரும் தடையாக இருக்கின்றனரா என்ற  செய்தியாளர் கேள்விக்கு, இது அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி என அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...