வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டது.


Coimbatore:

கோவையின் தென்கைலாயம் என்று போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். தற்போது மே மாதம் பாதியை எட்டி உள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலரின் அறிவுரையின் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அடுத்த சில நாட்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து, மலைப் பாதைகளில் அதிக அளவு மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு உள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி நாளை மே 13-ம் தேதி முதல் சாமி தரிசனம் செய்யத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நாளை காலை முதல் மலையேற வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டாம் என தெரிவித்து உள்ளனர்.

மலைப் பாதைகளில் மழைக் காலங்களில் வழுக்கும் தன்மையும், அபாயம் உள்ளதால், இந்தத் தடை உத்தரவை மீறி யாரும் மலை ஏற முயற்சிக்க வேண்டாம் என வனத்துறை எச்சரித்து உள்ளது.

கோடைக்கால சீசன் முடிவுக்கு வந்து உள்ள நிலையில், வனத்துறையின் இந்த அறிவிப்பு ஆன்மீகப் பயணத்தைத் திட்டமிட்டு இருந்த பக்தர்கள் இடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும், பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவாகப் பார்க்கப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...