கோவையில் சென்சார் கழிப்பறைகள் விரைவில் அறிமுகம்


கோவை மாநகராட்சி விரைவில் சென்சார் அடிப்படையிலான நான்கு கழிப்பறைகளை ரேஸ் கோர்ஸ் மற்றும் காந்திபுரம் ஆகிய பகுதிகளில் 24 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்த திட்டமிட்டிருந்தது. தற்போது இந்த கழிப்பறையின் இறுதிப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.

கோவை நகரின் முக்கிய பகுதியான காந்திபுரம் பேருந்து நிலையத்தின் அருகிலும் மற்றும் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதியிலும் இந்த சென்சார் அடிப்படையிலான கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளது.



இந்த கழிப்பறைகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக மொத்தம் நான்கு கழிப்பறைகளாக நிறுவப்பட்டுள்ளது. ஒரு கழிப்பறைகள் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் மொத்தம் ரூபாய் 24 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ளது.

கழிப்பறைகள் துருப்பிடிக்காதவாறு எஃகு உள்கட்டுமானிகள் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தொட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. 35 சதுரஅடி அளவில் ஒவ்வொரு கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த சென்சார் முறை கழிப்பறைகள் உபயோகிக்க நாணயம் பயன்படுத்த வேண்டும். நாணையங்கள் கொண்டு பயன்படுத்தினால் மட்டுமே கழிவறைகளின் கதவுகள் திறக்கப்படும். பின்னர் பயனர்கள் அனுமதிக்கப்படுவார்கள், தற்போது இதற்கு 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் நாணயங்களில் எதை பயன்படுத்துவது என மாநகராட்சி ஆணையர் முடிவு செய்வார் என தெரிகிறது.

இதற்கு மின்வசதிக்காக 600 வாட் தேவைப்படுகிறது. தற்போது இதற்கான மின் இணைப்புக்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. மின் இணைப்பு இல்லாததால் தற்போது பயன்பாட்டிற்கு வராத நிலையில் சென்சார் கழிவறைகள் உள்ளது. விரைவில் இந்த சென்சார் கழிவறைகள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...