கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சுகாதார சீர்கேடு நிலவுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Coimbatore: கோவை: கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிட வளாகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், இரண்டு வெளிநாடுகளுக்கும் தினமும் சராசரியாக 31 முதல் 32 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பயணிகளை வழியனுப்பவும், வரவேற்று அழைத்து செல்லவும் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

இத்தகைய சூழலில், விமான நிலைய நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் முறையாக பராமரிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் செயல்படாததால், அது பயன்பாட்டில் உள்ளதா என்பதில் குழப்பம் நிலவுவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும், சுடுநீர் மற்றும் குளிர்ந்த நீர் வசதியுடன் கூடிய நவீன குடிநீர் இயந்திரங்கள் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல், நுழைவாயில் அருகே செயல்பட்டு வரும் கழிப்பிடங்களும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் நிலையில், மொத்தம் மூன்று கழிவறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு கழிவறை மட்டுமே உள்ளதாகவும், சிறுநீர் கழிப்பதற்காக இரண்டு பேசின்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பயணிகள் மட்டுமின்றி டாக்ஸி ஓட்டுநர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இந்த கழிப்பிடங்களை பயன்படுத்தி வரும் நிலையில், உரிய பராமரிப்பு இல்லாததால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாக நோய் தொற்று அபாயம் ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், விமான நிலையத்துடன் தொடர்பில்லாத பலரும் வெளிப்புற பகுதிகளில் இருந்து அருகிலுள்ள கேட் வழியாக வந்து கழிப்பிடத்தை பயன்படுத்துவதால், சுகாதார பிரச்சினை மேலும் மோசமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் கோவை விமான நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார பராமரிப்பில் காணப்படும் குறைபாடுகள் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், விமான நிலைய நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...