FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.


கோவை:

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடும், போதைப்பொருட்களின் அதிகரிப்பும் இளைஞர் சமுதாயத்தை கடுமையாக பாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். மாநில அரசே மதுக்கடைகளை நடத்துவதும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எளிதில் கிடைத்ததும் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழ்நாட்டை மதுவும் போதையும் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்றும், அதற்காக படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து முழுமையான மதுவிலக்கு நோக்கி நகர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த காலங்களில் நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டபோது, அவை உட்புற சாலைகளுக்கு மாற்றப்பட்டதோடு பல இடங்களில் சட்டவிரோத “சந்து கடைகள்” உருவாகியதாகவும், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சட்டவிரோத மதுவிற்பனை மையங்கள் இயங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேபோல், கடந்த ஆட்சியில் FL2 உரிமம் மூலம் மனமகிழ் மன்றங்கள் மற்றும் சமூக கிளப்புகளுக்கு வழங்கப்பட்ட மதுபான விற்பனை அனுமதிகள் சமூக சீரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், இளைஞர்களிடையே மது அருந்துவதை சமூக அந்தஸ்தாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, சமூக நலனை கருத்தில் கொண்டு FL2 மதுபான உரிமங்களை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைகள், அவற்றின் வருவாய் மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...