பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் சரவணன், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் பகுதியில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் மற்றும் ரயில் நிலைய பராமரிப்பு பணிகளை சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் சரவணன் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள், ரயில் நிலைய வளாகம், பார்சல் புக்கிங் பிரிவு, நிலைய அதிகாரி அலுவலகம், பணியாளர்களின் ஓய்வறைகள் மற்றும் பயணிகள் காத்திருப்போர் அறைகள் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ரயில் நிலையச் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் போஸ்டர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறும், ரயில்வே பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பலகைகளை பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் அமைக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் ஆய்வு செய்த அவர், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....